ஒலியை விட 10 மடங்கு வேகம் உக்ரைன் மீது அதிநவீன ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ரஷ்யா! 4 பேர் உயிரிழப்பு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கீவ், ஜன. 10- உக்ரைன் மீதான போரில், ஒலியை விட பத்து மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய அதிநவீன ‘ஆரெஷ்னிக்’ (Oreshnik) ரக ஏவுகணையை ரஷ்யா மீண்டும் பயன்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (8.1.2026) இரவு தொடங்கி நேற்று (9.1.2026) அதிகாலை வரை நடத்தப்பட்ட இந்த சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2024-ஆம் ஆண்டு இறுதியில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக, கடந்த அக்டோபர் மாதம் உக்ரைனின் நீப்ரோ நகரில் முதன்முதலாக ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணையை ரஷ்யா ஏவியது. அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, தற்போது மீண்டும் இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்னல் வேகம்

இது ஒலியைப் போல 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடியது.     தடுக்க முடியாதது: உலகின் எந்தவொரு நவீன வான்பாதுகாப்பு அமைப்பாலும் இந்த ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியாது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இது நடுத்தர தொலைவு இலக்குகளைத் தாக்கக்கூடிய புதிய வகை ஏவுகணையாகும்.

நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள போலந்து நாட்டின் எல்லைக்கு அருகாமையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது அய்ரோப்பிய நாடுகளின் இறையாண்மையைக் குலைக்கும் ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை என பல்வேறு நாட்டு அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை, முதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) என கருதப்பட்டது. ஆனால், இது ஒரு அதிநவீன நடுத்தர தொலைவு ஏவுகணை என்பதை ரஷ்யா பின்னர் உறுதிப்படுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *