சில தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூட திருமண ஊர்வலங்களில் ஆடுவதைப் போல அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியா

மோடியை மறைமுகமாக கிண்டல் செய்கிறாரா டிரம்ப்

புதுடில்லி, ஜன. 8– அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளதாகக் கிளம்பியுள்ள தகவல்கள் இந்திய அரசியலில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன.

டிரம்பின் சர்ச்சை விமர்சனம்

சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய டொனால்ட் டிரம்ப், சில தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூட திருமண ஊர்வலங்களில் அசிங்கமாக ஆடுவதைப் போல அநாகரீகமாக நடந்துகொள்கிறார்கள் என்று கிண்டல் செய்துள்ளார். இது பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், “எனக்கு விருப்பமில்லாத நிலையிலும், மோடி என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். முன்னாள் நண்பர் என்ற முறையில் அவரைச் சந்திக்க அனுமதி அளித்தேன்” என்று டிரம்ப் கூறியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2013 நிகழ்வு

அன்று மன்மோகன் சிங் செய்த அதிரடி: 2013-ம் ஆண்டு அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி (தேவயானி கோப்ரகடே) அவமானப்படுத்தப்பட்டார். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், உடனடியாகச் செயல்பட்டு டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கான பாதுகாப்பைத் திரும்பப் பெற்றார். சில முக்கிய அமெரிக்க அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதோடு, அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் ரத்து செய்தார். இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து அமெரிக்கா மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

அன்றைய அரசு காட்டிய துணிச்சலை இன்றைய அரசு காட்டத் தவறுவது ஏன் என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான கேள்வியாக உள்ளது. இந்த விவகாரம் வரும் நாட்களில் இந்திய – அமெரிக்க உறவுகளில் பிரதிபலிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *