சென்செக்ஸ் 780 புள்ளி சரிவு முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, ஜன. 9–  இந்திய பங்குச் சந்தை சரிவு காரணமாக, முதலீட் டாளர்களுக்கு நேற்று (8.01.2026) ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந் தைகள் தொடர்ந்து 4ஆவது நாளாக நேற்றும் சரிவில் முடிவடைந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் (சென்செக்ஸ்) 780 புள் ளிகள் சரிந்து 84,180இல் நிறைவடைந்தது. இது போல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் (நிப்டி) 264 புள்ளிகள் சரிந்து 25,877இல் நிறை வடைந்தது.

கடந்த 4 மாதங்களில் இல்லாத வகையில், சென்செக்ஸ், நிப்டி குறியீட்டெண்கள் ஒரே நாளில் சுமார் 1% சரிந்தன. இதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலோகம் (3.4%), எண் ணெய்-எரிவாயு (2.84%), பொதுத் துறை வங்கிகள் (2.08%), அய்.டி. (2%) துறை சார்ந்த பங்குகள்அதிக அளவில் இழப்பை சந்தித்தன.

இந்தியா உட்பட ரஷ்யாவிடம் கச்சா எண் ணெய் வாங்கும் நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 500% வரி விதிக்க வகை செய்யும் செனட் உறுப்பினரின் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று (8.1.2026) தகவல் வெளியானது. இதை யடுத்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் அதிக அளவில் பங்குகளை விற்றனர்.

பன்னாட்டு அளவில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள், அந்நிய மூலதன வெளியேற்றம் மற்றும் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு வருவாய் முடிவுகளுக்கு முன்னதாக நிலவும் எச்சரிக்கை உணர்வு போன்றவையே பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *