மும்பை, ஜன.9 கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாகஉடைந்தது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர்அணியும், மகாராட்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேதலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 2014, 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பிரதமர்நரேந்திர மோடிக்காக நான்தீவிர பிரச்சாரம் செய்தேன். இருமுறை மோடிக்கு உதவிசெய்தபோதிலும் அவர் எனதுகட்சியை உடைத்தார்.
அவர் பிரதமராக வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் நான் அழிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். மகாராட்டிராவில் இருந்து மும்பையை பிரிக்கவேண்டும் என்பது பாஜகவின்பழைய கனவு ஆகும். சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே கடந்த 2012-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் பாஜக வளைந்து நின்றது. தற்போது அவர் உயிரோடு இல்லாத சூழலில் காகித அளவில் சிவசேனாவை அழித்து விட்டனர். ஆனால் மக்களின் மனங்களில் இருந்து சிவசேனாவை அழிக்க முடியாது. அரசியல்நாகரிகத்தைமீறி பாஜக செயல்படுகிறது. 20 ஆண்டுகளுக்குபிறகு நானும் ராஜ் தாக்கரே வும் ஒன்றிணைந்துள்ளோம். இனிமேல் நாங்கள் ஒருபோதும்பிரிய மாட்டோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
