உடைப்பது – பிளப்பது தானே அவர்கள் வேலை சிவசேனையை இரண்டாக உடைத்தவர் பிரதமர் மோடி உத்தவ்தாக்கரே குற்றச்சாட்டு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, ஜன.9 கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாகஉடைந்தது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர்அணியும், மகாராட்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேதலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன.

இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 2014, 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பிரதமர்நரேந்திர மோடிக்காக நான்தீவிர பிரச்சாரம் செய்தேன். இருமுறை மோடிக்கு உதவிசெய்தபோதிலும் அவர் எனதுகட்சியை உடைத்தார்.

அவர் பிரதமராக வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் நான் அழிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். மகாராட்டிராவில் இருந்து மும்பையை பிரிக்கவேண்டும் என்பது பாஜகவின்பழைய கனவு ஆகும். சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே கடந்த 2012-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் பாஜக வளைந்து நின்றது. தற்போது அவர் உயிரோடு இல்லாத சூழலில் காகித அளவில் சிவசேனாவை அழித்து விட்டனர். ஆனால் மக்களின் மனங்களில் இருந்து சிவசேனாவை அழிக்க முடியாது. அரசியல்நாகரிகத்தைமீறி பாஜக செயல்படுகிறது. 20 ஆண்டுகளுக்குபிறகு நானும் ராஜ் தாக்கரே வும் ஒன்றிணைந்துள்ளோம். இனிமேல் நாங்கள் ஒருபோதும்பிரிய மாட்டோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *