தெருநாய்களை கணக்கெடுக்கும் பீகார் பள்ளி ஆசிரியர்கள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பாட்னா, ஜன. 8- சசாரம்  மாநக ராட்சி தனது எல்லைக்குள் செயல்படும் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், தெரு நாய்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பொறுப்பு அலுவலர் ஒருவரை (ஆசிரியரை) நியமிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் காணப்படும் தெரு நாய்களின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய நிலை குறித்து மாநகராட்சிக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து சசாரம் மாநகராட்சி ஆணையர் விகாஸ் குமார் கூறுகையில், “அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திட்டமிடலுக்கு உதவுவதற்காகத் தெரு நாய்கள் குறித்த துல்லியமான, உள்ளூர் அளவிலான தகவல்களைச் சேகரித்து வழங்கிடப் பொறுப்பு அலுவலரை நியமிக்குமாறு கல்வி நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.

இருப்பினும், ஆசிரியர்களுக்கு இதுபோன்ற கற்பித்தல் அல்லாத பிற பணிகள் வழங்கப்படுவதால் மாண வர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *