தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் களம் தயார்! துணைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன. 7– தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுடன் சட்டமன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இதற்கெனத் தனிச் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், துணை தேர்தல் ஆணையர் மனிஷ் கார்க் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அய்ந்து மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் மேலாண்மை பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக வாக்குப்பதிவு மய்யங்களில் பணியாற்றும் பணியாளர்களின் தேவை.பாதுகாப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட வேண்டிய ஒன்றிய ஆயுதப்படை காவல் துறையினரின் எண்ணிக்கை தேர்தல் கால மேலாண்மை மற்றும் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, நிர்வாக ரீதியான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *