ஆபாசமான, சட்டவிரோத பதிவுகளுக்குத் தடை எக்ஸ் (X) தளம் அறிவிப்பு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன.6–- ஆபாசமான மற்றும் சட்டவிரோத உள்ளடக் கங்களை நீக்குவதோடு, இதுபோன்ற பதிவுகளைத் தொடர்ந்து வெளியிடும் பயனர்கள் மற்றும் கணக்குகளுக்கு நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும் என்று எக்ஸ் (X) சமூக வலைதள நிறுவனம் அறிவித்துள்ளது.

எக்ஸ் தளத்தின் ‘க்ரோக்’ எனும் செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் உருவாக்கப்படும் ஆபாச மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கடந்த 2.1.2026 அன்று கடுமையான அறிவிக்கை அனுப்பியது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 72 மணி நேரத்திற்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஒன்றிய அரசின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, எலான் மஸ்க் தனது பதிவில், “க்ரோக் செயலியில் ஆபாச உள்ளடக்கங்களைப் பதிவேற்றம் செய்வது சட்டவிரோதச் செயலுக்குச் சமம். அத்தகைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், எக்ஸ் தளத்தின் பன்னாட்டு அரசு விவகாரங்கள் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன:  குழந்தை ஆபாசப் படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகள் உள்ளிட்ட சட்டவிரோதப் பதிவுகள் உடனடியாக நீக்கப்படும் விதிகளை மீறும் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்.தேவைப்பட்டால் உள்ளூர் அரசு மற்றும் சட்ட அமைப்புகளுடன் இணைந்து எக்ஸ் தளம் நடவடிக்கை எடுக்கும்.

பெண்களை அநாகரிகமாகச் சித்தரிக்கும் வகையில் ‘க்ரோக்’ ஏஅய் மூலம் உருவாக்கப்படும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவுவதைத் தடுக்கக் கோரி, சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *