மொழிகளில் உயர்வு, தாழ்வு இல்லை: ‘‘ஹிந்தித் திணிப்பு விவாதங்களுக்கு மத்தியில் சந்திரபாபு நாயுடுவின் அதிரடிப் பேச்சு!”

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அமராவதி, ஜன.6 நாட்டில் பேசப்படும் மொழிகளில் உயா்ந்தது, தாழ்ந்தது என்று ஏதுமில்லை. மக்கள் அனைவரும் தங்கள் தாய் மொழி மட்டுமன்றி பிற மொழிகள் அனைத்தையும் மதித்து நடக்க வேண்டும் என ‘ஹிந்தி ஹிந்தி ஹிந்தி’ என்று கூறும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அதன் கூட்டணி கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சருமான   என்.சந்திரபாபு நாயுடு மறைமுக அறிவுரை கூறினார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்றுவரும் உலக தெலுங்கு மாநாட்டில் 5.1.2026 அன்று பங்கேற்ற அவா் பேசியதாவது: ஒருவா் தனது தாய்மொழியில் கற்கும்போதுதான் சிறந்து விளங்க முடியும். தாய்மொழியை மறப்பது என்பது நமது அடையாளத்தையே இழப்பது போன்றாகும். அதே நேரத்தில் ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று விளங்குவதும் அவசியம்.

மக்கள் ஒருவா் மற்றொருவரின் மொழியை மதித்து நடக்க வேண்டும். மொழிகளில் உயா்வு, தாழ்வு என்று ஏதுமில்லை.  இந்த மாநாட்டில் 40-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்து பங்கேற்றுள்ளனா். நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் குழந்தைகளுக்கு நமது தாய் மொழியின் இனிமையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பொட்டி சிறீராமுலு பெயரில் ராயலசீமாவில் தெலுங்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்றார். ஒன்றிய அரசு அனைத்து இடங்களிலும் ஹிந்தியை திணித்துவருகிறது, உள்துறை அமைச்சரகம் முழுக்க முழுக்க கடித்தப் பரிமாற்றம் ஹிந்தியில் மட்டுமே இருக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் தற்போது ஆந்திர முதலமைச்சர் மறைமுகமாக ஹிந்தி திணிப்பு குறித்து பேசியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *