அசாம் சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழுவுக்கு தலைவர் பிரியங்கா

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன.6 அசாமில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இன்று பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.

இச்சூழலில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் அசாம் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அசாமை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் முன்கூட்டியே தயாராகி வருகிறது. இதற்கான முக்கியப் பொறுப்பை மக்களவை உறுப்பினர் பிரியங்கா வதேராவிடம் காங்கிரஸ் அளித்துள்ளது. அசாமின் வேட்பாளர் தேர்வுக்குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலுக்கு முன் 2019-இல் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்தார் பிரியங்கா. அப்போது முதல் அவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸார் விரும்பினர். இந்நிலையில் இப்புதிய நியமனம் மூலம் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் கருதப்படுகிறது.

பிரியங்கா, கடந்த 2024 நவம்பரில் வயநாடு இடைத்தேர்தல் மூலம் முதல்முறையாக மக்களவைக்குள் நுழைந்தார். இவர் தனது சகோதரர் ராகுலை விட அதிக அரசியல் அனுபவம் கொண்டவர். 2004-இல் ராகுல் மக்களவைக்கு போட்டியிட்டு தீவிர அரசியலில் நுழைந்தார். ஆனால் அவருக்கு முன்பாகவே பிரியங்கா தன் தாயான சோனியாவின் தேர்தல் பிரச்சாரங்களை வழிநடத்தி வந்தார். பாட்டி இந்திரா காந்தியுடன் ஒப்பிடப்படும் பிரியங்கா, கட்சியின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டால், காங்கிரஸை மீண்டும் பலப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்களும் கட்சியில் உள்ளனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரியங்கா உ.பி. பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு, கிழக்கு உ.பி. தேர்தல் பிரச்சாரத்துக்கு பொறுப்பேற்றிருந்தார். எனினும் இதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை.

உ.பி.யை விட அசாமில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதே வேட்பாளர் தேர்வுக் குழுவின் பணி. இருப்பினும், பிரியங்காவின் பங்கு அதை விட அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அசாமில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டணி அமைய உள்ளது. இங்கு பீகாரில் ஏற்பட்டதைப் போன்ற குழப்பங்கள் ஏற்படக்கூடாது என கட்சித் தலைமை கருதுகிறது. இதற்கு ராகுலை விட பிரியங்காவே பொருத்தமானவர் என நம்பி அவருக்கு முக்கியப் பொறுப்பை அளித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *