ஒன்றிய பிஜேபி அரசின் புதிய ஊரக வேலை திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஜனவரி எட்டாம் தேதி இந்திய அளவில் போராட்டம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன. 5- புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக ஜனவரி 8ஆம் தேதி முதல் நாடு தழுவிய காங்கிரஸ் கட்சி நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பெயர் மாற்றம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர், விக்ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (ஜி ராம் ஜி) என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய ஊரக வேலை உறுதித் திட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.

மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும், மசோதாவின் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்தும் காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் டில்லியில் 3.1.2026 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது வேணுகோபால் கூறியதாவது:

வறுமை குறைந்தது

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அமல் செய்யப்பட்டது. இந்த திட்டத்தால் வறுமை குறைந்தது. தொழிலாளர்களின் இடம்பெயர்வு குறைந்தது. புதிய கால்வாய்கள், அணைகள் கட்டப்பட்டன. கரோனா பெருந்தொற்று மற்றும் நெருக்கடியான காலங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் மக்களின் பாதுகாவலனாக விளங்கியது.

காங்கிரஸ் கொண்டு வந்த இந்த திட்டத்துக்கு மாற்றாக ‘ஜி ராம் ஜி’ என்ற புதிய திட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தி உள்ளது. புதிய திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இந்த திட்டத்துக்கான நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை ஒன்றிய அரசு மறைமுகமாக அழித்து வருகிறது. இவ்வாறு வேணுகோபால் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த நாடும் பாதிக்கும்

ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: ஒன்றிய அரசு 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. விவசாயிகளின் போராட்டத்தால் அந்த 3 சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக ‘ஜி ராம் ஜி’ திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்படும். புதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் காக்கும் இயக்கம் என்ற பெயரில் காங்கிரஸ் சார்பில் ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் தொடங்கப்படும். இந்தப் போராட்டம் தொடர்ந்து 45 நாட்கள் நீடிக்கும். இது தேசிய இயக்கமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *