சிரியா முன்னாள் அதிபர் ஆசாத் உருவம் பதித்த கரன்சிகள் மாற்றம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டமாஸ்கஸ், ஜன. 3- சிரியாவில் நடந்த அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாக, முன்னாள் அதிபர் பஷாத் அல் ஆசாத் உருவம் பதித்த கரன்சி நோட்டுகளை நீக்கி, புதிய நோட்டுகளை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

மேற்காசிய நாடான சிரியாவில், 2000இல் இருந்து அதிபராக இருந்தவர் பஷார் அல் ஆசாத். அதற்கு முன், 30 ஆண்டுகளாக அவரது தந்தை ஹபீஸ் அல் ஆசாத் அதிபராக இருந்தார். இருவரும் சர்வாதிகார ஆட்சி நடத்தினர்.

கடந்த, 2011இல் அரசுக்கு எதிராக துவங்கிய போராட்டம், உள்நாட்டு போராக வெடித்தது. அரசுக்கு எதிராக பல அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகள் இணைந்தன. 14 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின், 2024இல் இந்த கிளர்ச்சிப்படைகள் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் உட்பட, பெரும்பாலான நகரங்களை கைப்பற்றின.

இதையடுத்து, ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடினார். இடைக்கால அரசின் அதிபராக அகமது அல்-ஷரா பதவியேற்றார். அவர் நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, சிரியா ரிசர்வ் வங்கி, ஆசாத் மற்றும் அவரது தந்தையின் படங்கள் இடம்பெற்றிருந்த கரன்சி நோட்டுகளை நீக்கி, புதிய கரன்சிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

‘சிரியன் பவுன்ட்’ எனப்படும் இந்த கரன்சி நோட்டுகளில், ஆசாத் படங்களுக்கு பதிலாக, அந்நாட்டின் தேசிய சின்னமான ரோஜா மலர் மற்றும் பாரம்பரிய விவசாயத்தை குறிக்கும் கோதுமை, ஆலிவ், ஆரஞ்சு, மல்பெரி போன்ற இயற்கை சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கரன்சி நோட்டுகள், ஜன., 1 முதல் அமலுக்கு வந்தன. ‘பழைய கரன்சிகள் 90 நாட்களுக்கு பின் புழக்கத்தில் இருக்காது; அதற்குள் மாற்றிக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *