சமூக வலை தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை பிரான்சு அரசும் அறிவிப்பு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பாரீஸ், ஜன. 3- சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்துவ தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த நிலையில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க பிரான்சு அரசு திட்டமிட்டுள்ளது.

அதிகப்படியான திரை நேரத்தில் இருந்து குழந்தைகளைப் பாது காக்க 15 வயதுக்குட்பட்ட வர்களுக்கு சமூக ஊடக அணுகலுக்குத் தடை விதிக்க மசோதா முன்மொழியபட்டுள்ளது. அதில் கட்டுப்படற்ற இணைய அணுகல் கொண்ட குழந்தைகள் பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்றும், இணையவழித் துன்புறுத்தலுக்கு ஆளாகலாம் அல்லது அவர்களின் தூக்க முறைகளில் மாற்றங்களை அனுபவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இம்மாதம் நாடாளு மன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது. இதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *