அரியானாவில் இன்னொரு ‘நிர்பயா’ கொடூரம் ஆட்டோவுக்காக காத்திருந்த பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன. 2- அரியானா வின் பரிதாபாத், மெட்ரோ சவுக் பகுதியில் கடந்த 29.12.2025 அன்று இரவு 25 வயது பெண் ஒருவர் கல்யாண்புரி சவுக் செல்வதற்காக ஆட்டோவுக்கு காத்திருந்தார். அப்போது மாருதி வேனில் வந்த இரு ஆண்கள் லிப்ட் தருவதாக கூறி அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் அவர்கள் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பிறகு ஓடும் வேனில் இருந்து வெளியே தள்ளிவிட்டு, தப்பிச் சென்று விட்டனர்.

இது தொடர்பாக சிசிடிவி பதிவு களின் அடிப்படையில் உ.பி. மற்றும் ம.பி.யை சேர்ந்த இருவரை பரிதாபாத் காவல்துறையினர் நேற்று முன்தினம் (31.12.2025) கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக பரிதாபாத் காவல்துறையினர் கூறுகையில், “வேனில் இருந்து வெளியே வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அந்தப் பெண் ஒருவழியாக சமாளித்து தனது சகோதரியை உதவிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ நாளில் அந்தப் பெண் தனது தோழியின் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். எந்த வாகனமும் கிடைக்காததால் அவருக்குத் தாமதமாகிவிட்டது. அவருக்கு லிப்ட் கொடுத்த இரு ஆண்களும் கல்யாண்புரி சவுக் செல்வதற்கு பதிலாக குருகிராம் சாலையில் சென்றுள்ளனர். பிறகு இந்த கொடூர குற்றத்தை இழைத்துள்ளனர்” என்றார்.

டில்லியில் 13 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிர்பயா வழக்கை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறுகையில், “எங்கள் வீட்டுப் பெண் உதவி கேட்டு கூக்குரலிட்டபோது அவரை கொன்று விடுவோம் என்று மிரட்டி இருவரும் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்” என்று தெரிவித்தனர். இந்நிலையில், “அப்பெண்ணுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக 12-க்கும் மேற்பட்ட தையல் போடப் பட்டுள்ளன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது” என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

“மூன்று குழந்தைகளுக்கு தாயான அப்பெண், கணவரை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்ததாக காவல்துறையினர் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *