எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச. 30- தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில், சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சில விரைவு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

மேலும், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மெமு (MEMU) ரயில் உட்பட 28 ரயில்களின் எண்கள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாற்றப்பட உள்ளன. பயணிகளின் வசதிக்காக, 102 ரயில்களுக்கு தற்காலிக அடிப்படையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. கொல்லம் – தாம்பரம், நாகர்கோவில் – தாம்பரம், செங்கோட்டை – சென்னை எழும்பூர், எழும்பூர் – குருவாயூர், எழும்பூர் – மங்களூர் சென்ட்ரல், எழும்பூர் – ராமேசுவரம் மற்றும் எழும்பூர் – செங்கோட்டை தினசரி ரயில்கள் உட்பட 65 மெயில், விரைவு மற்றும் அதிவேக ரயில்களின் வேகம் ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயண நேரம் 5 நிமிடம் முதல் 85 நிமிடங்கள் வரை சேமிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *