இது எப்படி இருக்கு? ஊழல் புகார் அதிகாரிக்கு பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.29 – ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ‘பிரசார் பாரதி’யின் தலைவராக இருந்த நவ்னீத் குமார் கேசல், கடந்த 2ஆம் தேதி பதவி விலகினார். இவருக்கு பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: – உத்தரப்பிரதேச அரசு திட்டத்தில் கடந்த 2019–-2020 முதல் 2021–-20–22ஆம் நிதியாண்டு வரையிலும் ரூ.112 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும் அதில் பிரசார் பாரதி முன்னாள் தலைவர் நவ்னீத் பெரும் பங்கு லாபம் அடைந்திருப்பதாகவும் வருமான வரித்துறை 254 பக்க ரகசிய அறிக்கை தயாரித்தது.

அந்த அறிக்கை தொடர்பாக நவ்னீத் விளக்கத்தை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டு பிரசார் பாரதி தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போது நவ்னீத், பிரதமர் மோடி அலுவலகத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படு கிறது. இப்பதவியில் தற்போதுள்ள ஹிரேன் ஜோஷி சூதாட்ட செயலி ஊழல் விவகாரத் தில் சம்மந்தப் பட்டிருப்பதாக எழுந்த குற்றச் சாட்டைதொடர்ந்து மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. பிரதமர் அலுவலகத்தில் ஓர் ஊழல் அதிகாரிக்கு பதிலாக இன் னொரு கறை படிந்த அதிகாரியை மாற் றுவது ஏன்? இது தேச பாதுகாப் புக்கு அச்சுறுத்தலாகாதா? இது குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *