உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம், பங்கர்மாவ் தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் மீது கடந்த 2017-ஆம் ஆண்டில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இந்த வழக்கில் சிறையில் இருந்த எம்.எல்.ஏ. செங்கருக்கு டில்லி உயர் நீதிமன்றம் அண்மையில் பிணை வழங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பல்வேறு மகளிர் அமைப்புகள் டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்நிலையில் பிணை வழங்கிய டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்துள்ளது.
