கொல்கத்தா, டிச. 28– மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்கா ளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. அதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீக்கப்பட்ட வர்களில் வங்காளதேசத்தினர், ரோஹிங்கியா மக்கள் எவ்வளவு பேர் என்பதை தேர்தல் ஆணை யம் தெரிவிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செய லாளர் அபிஷேக் பானர்ஜி தெரி வித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மேற்கு வங்கத்தின் மக்கள் தொகை 10.05 கோடியாகும். இதில் SIR மூலம் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகையில் வெறும் 5.79 சதவீதம்தான். SIR மேற்கொண்ட மற்ற அனைத்து மாநிலங்களை விட இது மிகவும் குறைந்த சதவீதம். நீக்கப்பட்ட 58.20 லட்சம் வாக்காளர்களில் வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
