தொழில் முனைவோர்களுக்கான நிதி சேவைகள் அதிகரிப்பு

Viduthalai
3 Min Read

சென்னை, ஏப். 28- தொழில் முனைவோர்களுக்கு நிதிச் சேவைகளை அளித்துவரும் பூனாவல்லா ஃபின்கார்ப் நிறுவனம் 31.3.2023இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் இறுதி ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.

தனிநபர் கடன்கள், தொழில் வல்லுநர்களுக்கான கடன், வாகனம் மற்றும் வணிகக் கடன்கள், இயந்திரக் கடன்கள், மருத்துவ உபகரணக் கடன்கள் மற்றும் நுகர்வோர் கடன்கள் இதுவரை இல்லாத காலாண்டுக்கான அதிகபட்ச வழங்கல்களாக 151 சதவீதம் ஒவ்வொரு ஆண்டிலும் மற்றும் 89 சதவீதம் காலாண்டிலும், உயர்ந்து ரூ.6,371 கோடியாக இருந்தது.

இது தற்போது ஆண்டுக்கு 37 சதவீதம் அதிகரித்து பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு 100 சதவீத ஈவுத் தொகையை அறிவித்துள்ளது. 23-ஆம் நிதியாண்டில் வணிக வளர்ச்சி, கடன் தரம் மற்றும் லாபம் ஆகியவற்றில் முன்மாதிரியான செயல்திறனுடைய ஆண்டாக அமைந் துள்ளது என இந்நிறுவன நிர்வாக இயக்குநர் சி.ஏ.அபய் பூடாடா தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு நாளை முதல் 

கோடை விடுமுறை: 

கல்வித்துறை அறிவிப்பு

அரசியல்

சென்னை, ஏப்.28- அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை (29.4.2023) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10, பிளஸ் 1, பிளஸ்2 மாணவ-மாணவியருக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்படும்.

ஏப்ரல் மாத இறுதிக்குள், கீழ் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படும். அந்தவகையில் உயர் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்தன. அதன் தொடர்ச்சியாக, 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான ஆண் டுத் தேர்வுகள் 24ஆம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை காலண்டரில் இந்த கல்வி ஆண் டுக்கான கடைசி வேலை நாள் ஏப்ரல் 28ஆம் தேதி முடிகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இன்று டன் அனைத்து பள்ளிகளின் வேலை நாட்கள் முடிகிறது. இதையடுத்து, நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் மாதம் 1 அல்லது 5ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்காட் வரை மெட்ரோ நிலையங்கள், வழித்தடம் அமைக்க ஒப்பந்தம்

சென்னை, ஏப்.28- சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்காட் வரை உயர்மட்ட வழித்தடம், மெட்ரோ நிலை யங்கள் அமைப்பதற்கு ரூ.1,134 கோடி மதிப்பில் விகாஸ் நிகம் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளது.

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது. சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலை யில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத் தப்படுகின்றன. இதில், 3ஆவது வழித்தடமான மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில், சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலான 10 கிமீ நீள உயர்மட்ட வழித்தடம் மற்றும் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு ரூ.1,134.11 கோடி மதிப்பில் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இது சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டத்திற்கான கடைசி உயர்மட்ட வழித்தட ஒப்பந்தம் ஆகும். சோழிங்கநல்லூர் ஏரி- பொன் னியம்மன் கோயில், சத்தியபாமா பல்கலைக்கழகம், செம் மஞ்சேரி, காந்தி நகர், நாவலூர், சிறுசேரி, சிறுசேரி சிப்காட் -1 மற்றும் சிறுசேரி சிப்காட்-2 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகிறது.

இதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் ரயில் விகாஸ் நிகம் நிறுவ முதுநிலை துணைப் பொது மேலாளர் சவுத்ரி ரஜ்னீஷ் குமார் சிங் ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். இன்னும் சில ஆண்டுகளில் ஓஎம்ஆர் சாலை மெட்ரோ ரயில்களுக்கான முக்கிய சந்திப்பு மய்யமாக அமையும். 2ஆம் கட்ட திட்டம் முடிவடைந்தவுடன், சோழிங்க நல்லூரிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலைக்கும் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கத்திலிருந்து வேளச்சேரி வரை நீட்டிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஓஎம்ஆர் மெட்ரோ ரயில் சந்திப்பு அமைந்த பின்னர் ஈசிஆர் அல்லது வேளச்சேரிக்கு செல்வது 50% முதல் 80% வரை பயண நேரம் குறையும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *