சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பன்னாட்டுப் பசுமை உலக விருது

2 Min Read

 வாசிங்டன், ஏப். 28- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், லண்டனில் உள்ள பசுமை அமைப்பிலிருந்து 2023ஆம் ஆண்டுக்கான சுற்றுச் சூழல் விருதான பசுமை உலக விருதைப் பெற்றுள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதி அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற விழாவில் பன்னாட்டுப் பார்வையாளர்கள் முன்னிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பன்னாட்டுப் பசுமை உலக விருது வழங்கப்பட்டது. பசுமை உலக விருதுகள் பூமியின் சிறந்த சுற் றுச்சூழல் விருது பிரச்சாரங்களில் ஒன்றாகும்.

பசுமை உலக விருது என்பது சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்தின் அங்கீகாரம் மற்றும் சுற் றுச்சூழலில் அதன் நேர்மறையான தாக்கத்திற்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் ஒரு நிலையான மாதிரியை கொண்டு மெட்ரோ பயணிகளுக் கும் சென்னை மக்களுக்கும் நம்பக மான, வசதியான, பாதுகாப்பான மற்றும் விரைவான பயண அனுப வத்தை வழங்கும் அதே வேளையில் சுற்றுச்சூழலின் கட்டுமானம் மற்றும் செயல்பாடுகளின் போது சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப் பதை நோக்கமாகக் கொண்டுள் ளது. இதன் விளைவாக, இது ஆற் றல் திறன் மற்றும் நீர் மேலாண் மையை மேம்படுத்துவதில் பங்க ளிக்கிறது, அதாவது ஆற்றல் நுகர்வு, கார்பன் உமிழ்வு மற்றும் ஒட்டு மொத்த செயல்பாட்டுச் செலவு களைக் குறைக்கிறது. இதை யொட்டி, இந்த முயற்சிகள் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்க உதவியது. காற்றின் தரத்தை மேம் படுத்துதல், சுற்றுச்சூழல் வளங் களை பாதுகாத்தல், சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த சுற்றுச்சூழல் ரீதியாக தோட்டங் களை உருவாக்குதல் போன்ற சுற் றுச்சூழல் முயற்சிகளிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

அனைத்து விருது வகைகளிலும் கடினமான கார்பன் குறைப்பு பிரிவில் இந்த விருதை வெல்வதில் சென்னை மெட்ரோ ரயில் நிறு வனம் மேற்கொண்ட முயற்சிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாராட்டினர். இந்த விருது, அரசு நிறுவனங்கள், அமைச்சகங்கள், தனியார் மற்றும் பொதுத் துறை களில் உள்ள சமூகங்களை அங்கீ கரிக்கும் வகையில் உலகளவில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் விருது பிரச்சாரமாக கருதப்படுகிறது. இந்த விருதுகள் உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் சிறந்த நடை முறைகளை அங்கீகரிக்கவும் மற்றும் சுற்றுசூழலை மேம்படுத்தவும் பசுமை அமைப்பால் வழங்கப்படுகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *