நாம் ஜாதியற்ற, சோசலிச இந்தியாவுக்காக பாடுபட வேண்டும் சிபிஅய் தேசிய செயலாளர் து. ராஜா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச. 27 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 101-ஆவது தொடக்க நாள் விழா நிகழ்ச்சி அக்கட்சியின் தலைமையகம் அஜய் பவனில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் து.ராஜா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது து. ராஜா கூறியதாவது:-

இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களை நாம் மிகவும் தீவிரமாகப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 100 வருடங்களில், கட்சி பல்வேறு பின்னடைவுகளை சந்தித்துள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கம் இன்று பிளவு பட்டு உள்ளது. இது எவ்வளவு நாளைக்கு தொடர முடியும்?. இடதுசாரி இயக்கம் பிளவு பட்டு நிற்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் நாம் போரிட்டு கொண்டிருந்தபோது, ஒன்றிணைந்து முயற்சி மேற்கொண்டோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், எவ்வளவு காலம் கம்யூனிஸ்ட் தொடர்ந்து இவ்வாறு இருக்கும்.

ஒரு அரசியல் கட்சியாக நாங்கள் இடதுசாரி ஒற்றுமைக்கு வேண்டுகோள் விடுத்து, தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகிறோம். நாங்கள் ஒன்றிணைப்பிற்கு அழைப்பு விடுக்கும்போது, மற்றவர்களும் தீவிர சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

பாசிச சக்திகள் அரசியல் அமைப்புகளைப் பிளவுபடுத்தும்போது, கம்யூனிஸ்டுகளால் எவ்வளவு காலம் நீடிக்க முடியும்?. பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். நாம் சாதியற்ற, சோசலிச இந்தியாவுக்காக பாடுபட வேண்டும்

இவ்வாறு து. ராஜா பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *