எங்கே போகிறது இந்திய சமுதாயம்? ராகுல் விமர்சனம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச. 26– காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் நேற்று (25.12,2025)  வெளியிட்டுள்ள பதவில் கூறப்பட்டு இருப்பதாவது:

உன்னாவ் பெண்ணை சீரழித்த குற்றவாளிக்கு (முன்னாள் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர், செங்கர்) ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு, அச்சத்தின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இது என்ன வகையான நீதி? நாம் ஒரு செயலிழந்த பொருளாதாரமாக மட்டும் மாறவில்லை; இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் நாம் ஒரு செயலிழந்த சமுதாயமாகவும் மாறிக்கொண்டிருக்கிறோம்.

ஜனநாயகத்தில், மாற்றுக்குரல் எழுப்புவது உரிமை. அதை அடக்குவது குற்றம். பாதிக்கப்பட்டவருக்கு மரியாதையும், பாதுகாப்பும், நீதியும் கிடைக்க வேண்டுமே தவிர கையறு நிலை, பயம் மற்றும் அநீதி அல்ல.

குல்தீப் சிங் செங்கருக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு எதிராக டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மரியாதையுடன் நடத்த வேண்டும். அவருக்கு அநீதியும் அச்சமும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக நீதி உறுதி செய்யப்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *