காய்ச்சல் மற்றும் சளிக்கான 205 மருந்துகள் தரமற்றவை மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 23- நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து மற்றும் மாத்திரைகளின் தரம் குறித்து மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட பாதிப்புகளுக்காகப் பயன் படுத்தப்படும் 205 மருந்துகள் தரமற்றவை எனத் தெரியவந்துள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த மாதம் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த சோதனையின் முடிவில் 205 மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகோல்களில் தோல்வியடைந்து ‘தரமற்றவை’ என வகைப்படுத்தப் பட்டுள்ளன.

2 மருந்துகள்: முற்றிலும் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தரமற்ற மற்றும் போலி மருந்துகளைத் தயாரித்த நிறுவ னங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மற்றும் மருந்தகங்கள் விழிப்புடன் இருக்கும் வகையில், தரம் குறைந்த மருந்துகளின் முழுப் பட்டியலை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

முக்கிய குறிப்பு: உங்கள் மருந்துகளின் தரம் குறித்து அறிந்து கொள்ள https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *