பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 23-  தமிழ்நாட் டின் பல்வேறு மாவட்டங்களிலும் ரூ.273.79 கோடியில் கட்டப்பட்ட பள்ளி, விடுதி கட்டடங்கள், நூலகங்கள், காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.12.2025) காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

பள்ளிக்கல்வித் துறை சார்பில் 20 மாவட்டங்களில், 60 அரசுப் பள்ளிகளில் ரூ.96.49 கோடியில் 392 புதிய வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், 16 கழிப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டு, 8 குடிநீர் வசதிப் பணிகளும் செய்யப்பட்டுள்ளன.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.113.68 கோடியில் 2 மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக் கட்டடங்கள், விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

நூலகக் கட்டடங்கள்

பொது நூலக இயக்ககம் சார்பில் ரூ.17.82 கோடியில் 20 மாவட்டங்களில் 68 நூலகக் கட்டடங்கள், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.1.90 கோடியில் 3 கிளை நூலகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.12.2025) காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்ட மய்ய நூலகத்துக்கு ரூ.4.40 கோடியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

காவல் துறை கட்டடங்கள்

சென்னை மாவட்டம் – சிந்தாதிரிப்பேட்டையில் மகளிர் காவலர் விடுதி, கிருஷ்ணகிரியில் காவலர் பல்பொருள் அங்காடி மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காவலர் பாளையம் என ரூ.22.09 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதுதவிர, கோயம்புத்தூர் – நீலாம்பூர், சிவகங்கை – கீழடி, திருநெல்வேலி – மேலச்செவல், திருப்பூர் – பொங்கலூர், கள்ளக்குறிச்சி – களமருதூர், நாமக்கல் – கொக்கராயன்பேட்டை, மதுரை மாநகரம் – சிந்தாமணி, மாடக்குளம், தருமபுரி – புலிக்கரை ஆகிய இடங்களில் புதிதாக 9 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

3 புதிய காவல் உட்கோட்டங்கள்

காஞ்சிபுரம் – உத்திரமேரூர், நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி, நாமக்கல் – பள்ளிப்பாளையத்தில் 3 புதிய காவல் உட்கோட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை– செங்குன்றத்தில் 53 பணியாளர்கள் குடியிருப்புகள், தீயணைப்பு நிலையம் என ரூ.16.96 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சிறைத் துறை சார்பில் சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் 3,300 சதுர அடியில் ரூ.68.47 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் பார்வையாளர்கள் காத்திருப்பு கூடம் கட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ரூ.4.17 கோடியில் ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், டிஜிபி (பொறுப்பு) அபய்குமார் சிங், துறை செயலர்கள் தீரஜ்குமார் (உள்துறை), பி.சந்திரமோகன் (பள்ளிக்கல்வி) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *