பிஜேபி பெற்ற நன்கொடை எவ்வளவு? 2024 -2025 நிதியாண்டில் ரூ.6,655 கோடி காங்கிரஸ் பெற்றதை விட 12 மடங்கு அதிகம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.23  உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜக, கடந்த 2024-2025 நிதியாண் டில் பெற்ற நன்கொடை விவரங் களை தேர்தல் ஆணையத்தில் கடந்த 8-ஆம் தேதி தாக்கல் செய்தது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள அதில், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெற்ற நன்கொடை விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்:

2024-2025 நிதியாண்டில் மொத்தம் ரூ.6,654.95 கோடி நன் கொடை பெற்றுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. இது 2023-2024 நிதியாண்டில் பெற்ற ரூ.3,967 கோடியைவிட 68 சதவீதம் அதிகம். 2024-2025 காலக் கட்டத்தில் மக்க ளவைத் தேர்தலும் ஆந்திரா, ஒடிசா, மகாராட்டிரா, டில்லி உள்ளிட்ட சில மாநில பேரவைத் தேர்தலும் நடை பெற்றன என்பது குறிப் பிடத்தக்கது.

பாஜக பெற்ற நன்கொடையில் அதிகபட்சமாக புருடென்ட் தேர்தல் அறக்கட்டளை மட்டும் ரூ.2,180 கோடி வழங்கி உள்ளது. புரோகிரஸிவ் அறக்கட்டளை ரூ.757 கோடி, நியூ டெமாக்ரட்டிக் அறக்கட்டளை ரூ.150 கோடி நன்கொடை வழங்கி உள்ளன. மற்ற தேர்தல் அறக்கட்டளைகள் ரூ.3,112.5 கோடி வழங்கி உள்ளன. இதுதவிர, நிறுவனங்கள், தனி நபர் களிடமிருந்தும் பாஜக நன்கொடை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி கடந்த நிதியாண் டில் வெறும் ரூ.522.13 கோடி மட்டுமே நன்கொடையாக பெற்றுள்ளது. இது முந்தைய (2023-2024) நிதியாண்டின் ரூ.1,129 கோடியைவிட 43 சதவீதம் குறைவு. அத்துடன் பாஜகவின் நன்கொடையுடன் ஒப்பிடும்போது, 12 மடங்கு குறைவு.

தேர்தல் அறக்கட்டளைகள் மட்டுமல்லாது தேர்தல் பத்திரங்கள் மூலமும் நன்கொடை பெறும் முறை கடந்த 2018 முதல் அமலில் இருந்தது. வெளிப்படைத்தன்மை இல்லாத இந்த முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த நிதியாண்டில் எந்த அரசியல் கட்சியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறவில்லை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *