புதுடில்லி, டிச.23- கடந்த நிதியாண்டில், நாட்டில் அதிக ஏற்றுமதி செய்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. குஜராத் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளதாக, இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பு மேலும் தெரிவித்ததாவது: கடந்த 2024 – 2025ஆம் நிதியாண்டில், 9.83 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை குஜராத் ஏற்றுமதி செய்துள்ளது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 26.60 சதவீதம். இது, முந்தைய நிதி ஆண்டை விட சற்று சரிவு. குஜராத்தின் மொத்த ஏற்றுமதியில் ஜாம்நகர், மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இடம்பெற்றது.
இரண்டாம் இடத்தில் 5.57 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் மஹாராட்டிரா உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. கருநாடகா, உத்திர பிரதேசம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
