காங்கிரஸ் தலைவர் மண்டை உடைப்புபெங்களூரு, ஏப். 29- கருநாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது நிகழ்வுகளை சந் தித்து வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 நாட் களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதர வாக கருநாடகத்தில் முற்றுகை யிட்டு தீவிரமாக வாக்கு சேக ரித்து வருகிறார்கள். இவ்வாறு வரும் அரசியல் கட்சி தலைவர் கள், எதிர்க்கட்சிகள் மீது குற் றச்சாட்டுகளை கூறி வருவது டன், அனல் பறக்கும் வார்த் தைகளால் சாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கருநாடக காங்கிரஸ் முன்னாள் துணை முதலமைச்சரும், மூத்த காங் கிரஸ் தலைவருமான பரமேஸ் வர் மீது கல்வீசி தாக்குதல் நடத் திய சம்பவம் நேற்று (28.4.2023) நடந்துள்ளது. கர்நாடக தேர் தல் களத்தில் பரபரப்பை ஏற் படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-
கொரட்டகெரே தொகுதி யில் காங்கிரஸ் சார்பில் பர மேஸ்வர் போட்டியிடுகிறார். அவர் கொரட்டகெரே அருகே பைரேனஹள்ளி கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் பிரச்சாரம் செய்தார். அந்த சந்தர்ப்பத்தில் 300-க்கும் மேற் பட்டோர் திரண்டு வந்து பரமேஸ்வருக்கு மாலை அணிவித்தும், பூக்களை தூவி யும் உற்சாக வரவேற்பு அளித் தனர். அப்போது ஆதரவாளர் கள் பரமேஸ்வரை தோள்களில் தூக்கி வைத்து உற்சாகமாக நடனமாடியபடி இருந்தனர். அப்போது அடையாளம் தெரி யாத சிலர் பரமேஸ்வர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத் தியதாக தெரிகிறது. இதில் ஒரு கல் அவரது தலையை பதம் பார்த்தது. இதனால் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே பரமேஸ் வர் தனது கையால் ரத்தம் வெளியேறிய பகுதியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டார். பின்னர் அவரது ஆதரவாளர் கள் அவரை கீழே இறக்கி, அவரை அருகில் உள்ள அக்கி ரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென் றனர். அங்கு அவருக்கு முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக் காக துமகூருவில் உள்ள சித் தார்த்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வு பற்றி தகவல் அறிந்ததும் கொரட்டகெரே காவல்துறையினர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு திரண்டு இருந்த கிராம மக்கள், காங்கிரஸ் தொண்டர்களிடம் விசாரித்து தகவல்களை கேட்டு பெற்றுக் கொண்டனர். காவல்துறை யினரின் முதற்கட்ட விசார ணையில், காங்கிரஸ் வேட்பா ளர் பரமேஸ்வர் மீது திட்ட மிட்டே மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. பைரேன ஹள்ளி கிராமத்தில் பதற்ற மான சூழ்நிலை நிலவுவதால் அங்கு காவல்துறையினர் குவிக் கப்பட்டு பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் யாரும் அசம்பாவிதங்களில் ஈடுபடக் கூடாது என்று தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து கொரட்டகெரே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அடையாளம் தெரியாத அந்த நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
வேட்பு மனு தாக்கலின் போதும் தாக்குதல்
ஏற்கெனவே, பரமேஸ்வர் கடந்த 19-ஆம் தேதி கொட்ட கெரே தாலுகா அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய தாலுகா அலுவலகத்திற்குள் சென்ற சமயத்தில் சில நபர்கள் கல்வீசி தாக்கினார். இதில் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டு இருந்த பெண் காவலர் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். நிகழ்வு பற்றி கொரட்டகெரே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொரட்டகெரே தாலுகா ரெட்டிஹள்ளி அருகே வெங் கடபுரா கிராமத்தை சேர்ந்த ரங்கதம்மய்யா என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 2-ஆவது முறையாக நடந்த கல்வீச்சில் வேட்பாளர் பர மேஸ்வர் மண்டை உடைந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.