சென்னை, டிச.20 வக்பு நிறுவனங்கள் மற்றும் அதன் சொத்துகளின் விவரங்களை உமீத் தரவுத்தளத்தில் பதிவேற்ற வேண்டியது உமீத் சட்டப்படி கட்டாயமாகும். இதற்கான இறுதி நாள் கடந்த 6-ஆம் தேதி அன்று நிறைவடைந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பாக உமீத்தரவுத்தளத்தில் பதிவேற்ற கால அவகாசம் கோரி தமிழ்நாடு வக்புதீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பதிவேற்றம் செய்திட 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி வக்பு மற்றும் அதன் சொத்துகளின் விவரங் களை உமீத் தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்ய தமிழ்நாட்டிற்கு அடுத்த ஆண்டு (2026) ஜூன் மாதம் 6-ஆம் தேதியை கடைசிநாளாக அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே வக்பு நிறுவனங்கள் மற்றும் அதன் சொத்துகளை பாதுகாத்து பராமத்திட தாமத மின்றி உமீத்தரவுத்தளத்தில் ஒரு மாத காலத்திற்குள் பதிவேற்றம் செய்திட வக்பு நிறுவனங்களின் முத்தவல்லி, நிர்வாகக்குழுவினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்படி உத்தரவினை செயல்படுத்த தவறும், மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வக்பு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
