எல்லையில் பாதுகாப்புக்காக தேனீக்கூடுகள் அமைக்க முடிவாம் எல்லைப்பாதுகாப்புப்படை தகவல்

1 Min Read

இந்தியா

புதுடில்லி,நவ.7- இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), மேற்கு வங்காளத்தில் உள்ள எல் லைப்புற பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு தேனீக் கூடுகளை அமைக்கவுள்ளனர். 

இந்தப் புதிய முயற்சியின் மூல மாக எல்லையைத் தாண்டி கால் நடை மற்றும் மற்ற பொருட்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக் கிறார்கள் எல்லை பாதுகாப்புப் படையினர்.

முன்மாதிரி இல்லாத இந்தத் திட்டம் சமீபத்தில் 32-ஆவது பிஎஸ்எஃப் படையணி சார்பில் நாடியா மாவட்டத்தின் எல்லைப் புற பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் அந்தப் பகுதி மக்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற் படுத்தி தரும் நோக்கிலும் அறிமு கப்படுத்தப்பட்டது.

இந்தியா, வங்கதேசத்துடன் 4096 கிமீ நீளத்திற்கு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில் 2,217 கிமீ மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது.

இந்தத் திட்டத்தில் ஒன்றிய அரசும் பங்கெடுக்கவுள்ளதாம். மருத்துவ தாவரங்களை தேனீக் கூடுகளைச் சுற்றி அமைக்கும் போது தாவரங்களின் பெருக்கத்திற் கான மகரந்தச் சேர்க்கையாளர் களாகவும் தேனீக்கள் பணி யாற்றும். இந்தப் பகுதியில் கால் நடை, தங்கம், வெள்ளி மற்றும் போதை மருந்துகள் கடத்தும் செயல்கள் அதிகமாக நடைபெறு வதாகவும் கடத்தல்காரர்கள் வேலியை உடைப்பதும் உடைக்க முயற்சிப்ப துமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

எல்லை வேலிகளில் குறிப் பிட்ட இடைவெளியில் தேனீக் கூடுகள், மரச் சட்டகத்தோடு அமைக்கப்படும். எத்தனை எண் ணிக்கையில் என்பது குறித்து தெளிவான அறிவிப்பில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *