நாடாளுமன்றத்தில் சுவைபட…

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த சுவையான சில செய்திகள்:

 அவர் பொருள் எடுத்து அவரையே…

மக்களவையில் பேச எழுந்தார் தி.மு.க. உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி! அவர் பெயரைச் சொல்லி அழைப்பதற்குள், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா படாதபாடு பட்டு விட்டார். ‘செல்வ… செல்கம்… செல்… கணபதி’ என்று அவர் சொல்லி முடிக்கவும், அங்கிருந்து தனது பேச்சை தொடங்கினார் திமுக உறுப்பினர். “இதுதான் பிரச்சினை. தலைவர் அவர்களே, இதுதான் பிரச்சினை. என்னுடைய பெயரைச் சொல்வதற்கு நீங்கள் சிரமப்பட்டீர்கள் அல்லவா? இன்று எல்லா சட்டங்களுக்கும் சமஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் பெயர் கொடுக்கிறீர்கள். அந்தப் பெயரை உச்சரிக்க முடிகிறதா என்று பாருங்கள். சப்கா பிமாம் சப்கி ரக்ஷா என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளது ஒரு மசோதா” இன்சூரன்ஸ் திருத்தச் சட்ட மசோதாவைச் சுட்டிக் காட்டி அவர் உரையைத் தொடங்க, அவையில் பலத்த கரவொலி!

சீரியசா காமெடி பண்ணாதீங்க சார்!

lll

படிப்ப மட்டும் பறிச்சுக்க முடியாது…

மக்களவையில் பேசிய கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜான் பிரிட்டோ, தன்னுடைய உரையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான ‘அசுரன்’ படத்திலிருந்து,

“உன்கிட்ட சொத்து இருந்தா புடுங்கிக்குவானுக… காடு இருந்தா புடுங்கிக்குவானுங்க…. ஆனா படிப்பை மட்டும் யாராலையும் பறிச்சுக்க முடியாது” என்ற வசனத்தைச் சுட்டிக்காட்டி.உரையாற்றினார். அதனால் தானே தமிழ்நாடு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *