விபி – ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றம் நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்பிக்கள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டில்லி, டிச.19- மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக விபி ––- ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாற்றாக வளர்ந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டத்தை (விபி – ஜி ராம் ஜி) ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பான மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் (17.12.2025) தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களவையில் மசோதா மீதான விவாதத்தை ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த மசோதா நிறைவேற்றப ்பட்டுள்ளதால், 100 நாட்கள் வேலை என்பது, 125 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும், ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒன்றிய அரசு சார்பில் 60 சதவீதம் நிதி வழங்கப்படும். முன்னதாக 90 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், இனி குறைவாக வழங்கப்படும். மாநில அரசுகள் மீது நிதி சுமையை ஏற்றும் வகையில் இருப்பதாகவும், மகாத்மா காந்தி பெயர் நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களவையில் கடந்த இரண்டு நாள்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்புகளை விவாதத்தின் போது பதிவிட்டனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி களின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா மக்கள வையில் நிறைவேற்றப்பட்டது. இதனை மக்களவைத்தலைவர்  ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவைத் தலைவர்  இருக்கைக்கு முன்வந்து முற்றுகையிட்டனர். சில எம்பிக்கள் மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்த நிலையில்,  மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மக்களவையை  நாள் முழுவதும் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *