அஞ்சல் துறையின் வருவாய் பற்றாக்குறை ரூ.24,915 கோடி மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி., கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.18 அஞ்சல்துறையின் வருவாய் பற்றாக்குறை ரூ.24 ஆயிரத்து 915 கோடியாக அதிகரித்துள்ளது என்று மக்களவையில் டி.ஆர். பாலு எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்தார்.

அஞ்சல் துறையின் செயல்பாடு

மக்களவையில் தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு அஞ்சல் துறையின் செயல்பாடுகள் பிரச்சினை குறித்தபல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அண்மைக் காலங்களில் இந்திய அஞ்சல் துறை வங்கி, இன்ஷ்யூரன்ஸ் போன்ற நிதிசேவைகளில்  கவனம் செலுத்துவதால் அஞசல் நிலை யங்களின் எண்ணிக்கை குறைந்துள் ளதா? அதன் பொருட்டு அலுவ லர்கள் புதிய பணிகளுக்கு மடை மாற்றப்பட்டு அஞ்சல் சேவைகள் பாதிப்புக்குள்ளானதால் தபால் நிலையங்களின் எண்ணிக்கை  வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளதா? சென்ற அய்ந்தாண்டுகளில் நாடு முழுவதும் எத்தனை அஞ்சல் அலுவலகங்கள்மூடப்பட்டன? எத்தனை புதிய அலுவலகங்கள் திறக்கப் பட்டன? நிதிச்சேவைகளால் அஞ்சல்துறையின் வருவாய் மற்றும் லாபம் பெருகி உள்ளதா? அல்லது ,இழப்பு  ஏற்பட்டுள் ளதா?பெருமளவிலான காலிப் பணியிடங்களால் அஞ்சல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சீர்செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று அவர் கேள்விகள் கேட்டு இருந்தார்.

8565 கூடுதல் அஞ்சல் நிலையங்கள் –  அமைச்சர்

மக்களவையில்  அதற்கு ஒன்றிய அஞ்சல் துறை இணை அமைச்சர்  டாக்டர் பெம்மசானி சந்திர சேகர் பதில் அளித்து கூறியதாவது: சென்ற அய்ந்து ஆண்டுகளில் 8565 புதிய அஞ்சல் நிலையங்கள் திறக்க பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்ற 2021 ஆம் ஆண்டில் 1லட்சத்து 56 ஆயிரத்து 434 ஆக இருந்த அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை  2025இல் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டான 2024-2025இல் அஞ்சல் துறையின் மொத்த செலவு ரூ.37, 528 இருந்த நிலையில் மொத்த வருவாய் ரூ.12613 மட்டுமே. எனவே, வருவாய் பற்றாக்குறை ரூ.24915 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், நிதிசார்ந்த சேவைகளை மேற்கொண்டதால் அஞ்சல் துறை செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *