இந்தியாவில் 13 வயதிலேயே மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர் எய்ம்ஸ் ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.17- இந்தியாவில் பள்ளி மாணவர்கள் சராசரியாக 13 வயதிலேயே மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதாக எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் பெங்களூரு, லக்னோ, மும்பை, சண்டிகர், சென்னை உள்ளிட்ட நாட்டின் 10 முக்கிய நகரங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடம் போதைப் பழக்கம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

சுமார் 6,000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது தேசிய மருத்துவ இதழில் வெளியாகியுள்ளன. அதில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் சராசரியாக 12.9 வயதிலேயே, அதாவது 13 வயதுக்கு உட்பட்ட பருவத்திலேயே போதைப் பொருட்களுக்கு அறிமுகமாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, பசை, பெயிண்ட் மற்றும் பெட்ரோல் போன்ற வாசனையை நுகரும் ஆபத்தான போதைப் பழக்கம் 11 வயதிலேயே தொடங்கிவிடுவது ஆய்வாளர் களைப் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 15.1 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது போதைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

புகையிலை மற்றும் மதுபானத்தைத் தவிர்த்து, அபின் மற்றும் கஞ்சா போன்றவையும் மாணவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்களின் வகுப்பு படிநிலை ஏற ஏற போதைப் பழக்கமும் அதிகரிக்கிறது என்றும், 8ஆம் வகுப்பு மாணவர்களை விட 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மடங்கு அதிகமாகப் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், ‘கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் புகையிலை மற்றும் மதுபானம் மிக எளிதாகக் கிடைக்கிறது; எனவே ஆரம்பப்பள்ளி நிலையிலேயே விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *