பூனைக்குட்டி வெளியில் வந்தது! 100 நாள் வேலைத் திட்டம் பெயர் மாற்றம் ஏன்? ‘‘ராமராஜ்யத்தை ஏற்படுத்தத் தான்’’ – ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.17 ராம ராஜ்ஜியத்தை நிறுவவே VP-G RAM G மசோதா தயாராகியுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். மசோதா குறித்து உரையாற்ற அவர் எழுந்த போது, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அமளிக்கு இடையே பேசிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், ராம ராஜ்ஜியத்தை நிறுவவே VP-G RAM G மசோதா தயா ராகியுள்ளதாகவும், காந்தியைத் தாங்கள் மறக்கவில்லை எனவும் கூறினார். இதனால், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிய இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், காந்தியார் படத்துடன் மக்களவைத் தலைவர் இருக்கையை முற்று கையிட்டதால், அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், நாடாளுமன்ற வளா கத்தில் ஊர்வலமாகச் சென்ற இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், காந்தியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்  காந்தியார் படத்துடன் நாடாளு மன்றக் கட்டடத்தின் மீது நின்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், புதிய மசோதா குறித்து, ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை சார்பில், நாளை (18.12.2025) விளக்கம் அளிக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய பா.ஜ.க. அரசு, ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட’’த்தின் பெயரை, மாற்றியதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் ஊர்வலமாகச் சென்ற இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், காந்தியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் (புதுடில்லி, 16.12.2025).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *