காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறும் தலைநகரம் “வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வர வேண்டாம்!” வழக்குரைஞர்களுக்கு டில்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச. 16- டில்லியில் காற்று மாசு: காணொலி விசாரணைக்கு டில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது.

டில்லியில் காற்றின் தரக் குறியீடு மிக மோசம் அடைந்துள்ள நிலையில், வழக்கு விசாரணைக் காக நீதிமன்றத்துக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, காணொலி விசாரணையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வழக்குரைஞர்கள் மற்றும் நேரில் ஆஜராகும் தரப்பினருக்கு டில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காற்றின் தரக் குறியீடு (AQI)

ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 0 முதல் 500 வரையிலான புள்ளிகள் அடிப்படையில் காற்றின் தரத்தை கணக்கிடுகிறது. இது காற்றின் தரக் குறியீடு (AQI) எனப்படுகிறது.

இதில் AQI அளவு 0-50க்குள் இருந்தால் சுத்தமான காற்று என்றும், 401 புள்ளிகளுக்கு மேல் இருப்பது மிக மோசமான மாசுபாடு கொண்டது என்றும் வரையறுக்கப்படுகிறது.

டில்லியில் காற்றின் நிலை

தலைநகர் டில்லியில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து, காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.  இந்நிலையில், டில்லியில் 38 நிலையங்களில் நேற்று (15.12.2025) காற்றின் தரம் கடுமையானதாகவும், 2 நிலையங்களில் மிக மோச மானதாகவும் இருந்தது.

ஜஹாங்கீர்புரியில் காற்றின் தரக் குறியீடு (AQI) அதிகபட்சமாக நேற்று காலை 498 என்ற மிக மோசமான நிலையை எட்டியது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு

டில்லி உயர் நீதிமன்றத்தில் தற்போது நேரடி மற்றும் காணொலி என இரு முறைகளிலும் வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றத்தில் பட்டிய லிடப்பட்டுள்ள வழக்குகளில், வழக்குரைஞர்கள் மற்றும் வழக்கில் நேரடியாக ஆஜராகும் தரப்பினர் நீதிமன்றத்துக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, காணொலி விசாரணையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் இதே அறிவுறுத்தலை கடந்த 14ஆம் தேதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *