கடவுளை நம்பியோர் கைவிடப்படுவர்! பக்தர்கள் 10 பேர் பலி!!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அமராவதி, டிச.14– ஆந்திராவில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையில் உள்ள பள்ளத்தில் அதிகாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பேருந்தில் 37 பேர் பயணித்த நிலையில் 10 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சீதாராம ராஜு மாவட்டம் சிந்தூரு – மரிதுமில்லி மலைப்பாதையில் நேற்று (13.12.2025) அதிகாலையில் தனியாருக்கு சொந்தமான பேருந்து சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

துலசிபக்கா அருகே 9ஆவது மைல்கல் உள்ள திருப்பத்தில் தடுப்புச் சுவரை இடித்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.

இதுபற்றி தகவலறிந்தவுடன் காவல் துறையினரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்புப் பணியை தொடங்கினர்.

அப்போது 10 பேர் பலியானது தெரியவந்தது. மேலும் 27 பேர் காயமடைந்து இருந்தனர். இவர்களில் சிலர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பத்ராசலம் (‘புன்னிய’ சேத்திரம்) சென்றுவிட்டு, அன்னவாரத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

பேருந்தில் 35 பக்தர்கள், 2 ஓட்டுநர்கள் இருந்தனர். நள்ளிரவில் அவர்கள் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. இதுபற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *