கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

14.12.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* திருப்பரங்குன்றம் தீப வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இருந்து வேறு ஒரு நீதிபதிக்கு மாற்றுவதே சரியாக இருக்கும், மேனாள் நீதியரசர் அரி.பரந்தாமன் கருத்து.

* 100 நாள் வேலை திட்டத்துக்கு ஏன் பெயர் மாற்றம்? மகாத்மா காந்தி என்ற பெயரில் என்ன தவறு இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை ஏன் ‘பூஜ்ய பாபு வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ என்று பெயர் மாற்ற வேண்டும்?’ அவர்கள் வெறுக்கிறார்கள். இப்போது அவர்கள் காந்தியையும் வெறுப்பது தெரிகிறது, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

* மகாராட்டிரா, குஜராத்தை பின்னுக்கு தள்ளி பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* கேரள உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி: ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு பின்னடைவு,

* எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு: ஹிந்தி வழிக் கல்வியை அறிமுகப்படுத்திய மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் மாணவர்களிடம் ஆர்வம் இல்லை.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மனித வளம் 2047-க்குள் தமிழ்நாட்டை 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற உதவும்: வர்த்தக உச்சி மாநாடு (UEF) 2025இன் போது ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கிமயமாக்கல் காலகட்டத்தில் மனித வளமே தீர்க்கமான வளர்ச்சி உந்துசக்தியாக இருக்கும் என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் பேச்சு.

தி இந்து:

* பீகாரில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000 தொகையும் ஆண்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக ஆர்ஜேடி குற்றச்சாட்டு: முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்குப் பணம் செலுத்துவதற்கு பதிலாக, பீகார் அரசாங்கம் பல ஆண்களின் கணக்குகளுக்கு ரூ.10,000அய் மாற்றியுள்ளதாக எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) குற்றம் சாட்டியுள்ளது.

தி டெலிகிராப்:

* ஜாதிவாரி கணக்கெடுப்பு – கண் துடைப்பா? ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். “பதிலளிப் பவர்கள் தங்கள் ஜாதி விவரங்களை வெளியிட வேண்டாம் என்று தேர்வு செய்யலாம்,” என்று தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 – குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *