இதயம் வால்வு சிகிச்சைகளுக்கான புத்தாக்கமான மருத்துவ தொழில்நுட்ப கருத்தரங்கம்

1 Min Read

அரசியல்

சென்னை, மே 2- – செண்டியன்ட் சம்மிட், இது ரெட் ஹார்ட் அறக் கட்டளை நடத்திய ஆசியாவின் மிகப்பெரிய கட்டமைப்பு இதய மாநாடு ஆகும். இந்த மூன்று நாள் சிறப்பு மாநாடு, ஏப்ரல் 28 முதல் 30, 2023 வரை சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்டில் நடைபெற்றது. இதில் கட்டமைப்பு இதயம் மற்றும் டிரான்ஸ்கேட்டர் வால்வு சிகிச்சைகள் துறையில் 700 மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்ற உலகளாவிய ஒத்து ழைப்பு மற்றும் உரையாடல்களின் நடைபெற்றது.

இந்த மருத்துவ கருத்தரங்கில்  டாக்டர் ப்ரீத்தா ரெட்டி (நிர்வாக துணைத் தலைவர், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட்) “இந்த செண்டியன்ட் சம்மிட், நேரில் அல்லது இருதயவி யல் துறையில் சிறந்த நோக்கங்கள் ஒன்றிணைவதைக் குறிக்கின்றன, கல்வி, தொடர்பு மற்றும் கற்றல்கள் பகிர்ந்துகொள்வது, மருத்துவ முன்னேற்றங்களை உயர்த்துவது ஆகியவை பகிரப்பட்ட குறிக் கோளுடன் அமைகிறது. என்றார்.

இம்மருத்துவ கருத்தரங்கில் பேசிய, டாக்டர் சாய் சதீஷ் (மருத் துவ லீட்- டிரான்ஸ்கேட்டர் ஹார்ட் வால்வ் தெரபிஸ். அப்பல்லோ மருத்துவமனை குழுமம், இந்தியா),  “இந்த மாநாட்டில், இதய நோயைக் கண்டறிவதிலும் சிகிச்சை அளிப் பதிலும் தொழில்நுட்பம் வகிக்கும் முக்கியப் பங்கை நினைவுபடுத்துகி றோம். இதய நோய் சிகிச்சை சார்ந்த தொழில்நுட்பத்தில் ஏற் பட்டுள்ள முன்னேற்றங்கள், இரு தய நோய்களை நாம் புரிந்து கொண்டு சிகிச்சையளிப்பதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.”

“அறிவையும் நிபுணத்துவத் தையும் பகிர்ந்து கொள்ளவும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளவும், நோயாளியின் விளைவுகளை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களை ஆராய்வ தற்கான வாய்ப்பையும் செண்டி யன்ட் உச்சிமாநாடு வழங்குகிறது. இந்த மாநாட்டின் மூலம், இருதய வியல் தொழில்நுட்பத்தின் எதிர் காலம் உற்சாகமானது மற்றும் வாக்குறுதிகள் நிறைந்தது என்று உறுதியாக நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *