மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் பெரியார் பள்ளி மாணவர்கள் சாதனை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரியலூர், டிச. 12- அரியலூரில் 7.12.25 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில்  ஜெயங்கொண்டம் பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவி ஆர்.ரேஷ்மி முதலிடத்தை பிடித்து  தங்கப்பதக்கமும் சான்றி தழும் பெற்றார்.

அய்ந்தாம் வகுப்பில் பயிலும் மாணவன் கே.துவாரகேஷ் இரண் டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கமும் சான்றிதழும் பெற்றார்.

மாணவர்கள் தங்கள் திறமை, கட்டுப்பாடு மற்றும் உறுதியான முயற்சி யின் மூலம் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவர்களின் வெற்றிக்கு பயிற்சியாளர் வினோத்  விழிப்பு ணர்வான பயிற்சியும், பள்ளி நிர்வாகத்தின் தொடர்ந்த ஊக்கமும் முக்கிய காரணங்களாகும். இந்த சாதனை மாணவர்களின் விளையாட்டுத் திறமையை வெளிப் படுத்துவதோடு மட்டுமல்லாது, எதிர்காலப் போட்டிகளில் மேலும் உயர்ந்த நிலைகளை அடைய ஊக்கமாக இருக்கும்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைப்  பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர்  பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர் .

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *