அரசுப் பேருந்தில் தவறவிட்ட ரூ.2.5 லட்சம் நகை, பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர் அரசுப் பேருந்து ஊழியர்களின் நேர்மை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பட்டுக்கோட்டை, டிச. 11- அரசு விரைவுப் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தவறிவிட்ட, ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் கைப்பேசி அடங்கிய ஒரு கைப்பையை, அந்தப் பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் சற்றும் தாமதிக்காமல் உரியவர்களிடம் ஒப்படைத்து தங்களது நேர்மையை நிரூபித்துள்ளனர்.

சென்னையிலிருந்து பட்டுக் கோட்டைக்கு வந்த அரசு விரைவுப் பேருந்தில் ஆனந்தி என்பவர் பயணம் செய்தார். பட்டுக்கோட்டையில் அவர் இறங்கியபோது, தவறுதலாக தனது கைப்பையை பேருந்திலேயே விட்டுச் சென்றுவிட்டார்.அந்தப் பையில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரொக்கப் பணம் மற்றும் ஒரு கைப்பேசி இருந்தன. பேருந்துப் பணியாளர்கள், பேருந்தினைச் சோதனை செய்தபோது, இந்தக் கைப்பையைப் பார்த்தனர்.அரசு விரைவுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும், கைப்பையில் இருந்த ஆவணங்கள் மூலம் உரியவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தனர்.

விரைவில், ஆனந்தி குறித்த விவரங்களை அறிந்து அவரைத் தொடர்புகொண்டனர். இதையடுத்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் முன்னிலையில், அந்தப் பேருந்து ஊழியர்கள் கைப்பையை ஆனந்தியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

தவறவிட்ட உடைமைகளைத் திரும்ப ஒப்படைத்த அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் நேர்மையைப் பாராட்டி, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அவர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அரசின் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் இந்த நேர்மையான செயல் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *