ஒன்றிய அரசின் துக்ளக் தர்பார் ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டு ஏற்றுக்கொள்ளப்படாது!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதிய ஆவணங்கள் அறிவிப்பு

புதுடில்லி, டிச.11 ஆதாரில் பெயர் மாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஆவணங்களின் பட்டியலில் இருந்து பான் கார்டு  நீக்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது.

பான் கார்டு என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்டாலும், அது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக மட்டுமே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. அதில் முகவரி விவரங்கள் இருப்பதில்லை. மேலும், ஆதார் அட்டை பெயர் மாற்றத்திற்கான ஆவணங்களை மிகவும்  நம்பகமானதாகவும் மாற்றியுள்ளது. இதனால், பான் கார்டு இனி ஆதார் பெயர் மாற்றத்திற்குப் போதுமான ஆவணமாகக் கருதப்படாது.

ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய விரும்புவோர், இனிமேல் வலுவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் பெயர் மாற்றத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படும் முக்கிய ஆவணங்களில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பாஸ்போர்ட்     மக்களின் பிறப்புச் சான்றிதழ் பள்ளி மாற்றுச் சான்றிதழ் / டி.சி   கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஒன்றிய/மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை திருமணச் சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்/மருத்துவமனையின் எழுத்துப்பூர்வ சான்றிதழ் ஆதார் விவரங்களை மாற்றும்போது, நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணமானது உங்களின் தற்போதைய பெயர் (New Name) மற்றும் ஒளிப்படம் ஆகிய இரண்டையும் தெளிவாகக் கொண்டிருக்க வேண்டும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *