அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அனில் அம்பானி நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, டிச.11 தொழில் அதிபா் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்சா் நிறுவனங்களின் 13 வங்கிக் கணக்குகளை ரூ.55 கோடி இருப்புடன் அமலாக்கத் துறை நேற்று (10.12.2025) முடக்கியது.அந்நியச் செலாவணி முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே பல்வேறு வங்கிக் கணக்குகளில் கடன் பெற்றது தொடா்பான கடன் மோசடி வழங்குகள் அனில் அம்பானி மற்றும் அவரின் மகன் ஜெய் அன்மோல் அம்பானி மீது உள்ளது.இந்நிலையில் போலி நிறுவனங்கள் தொடங்கி கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மாற்றிய வழக்கில் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக அனில் அம்பானியிடம் விசாரணை நடத்த கடந்த மாதம் அமலாக்கத் துறை அழைப்பு விடுத்தது. ஆனால், நேரில் ஆஜராக மறுத்த அவா், காணொலி முறையில் வேண்டுமானால் ஆஜராவதாகத் தெரிவித்தாா். ஆனால், அதை அமலாக்கத்துறை ஏற்கவில்லை.நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்சா் நிறுவனத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கிய பொது நிதியை அய்க்கிய அரபு அமீரகத்துக்கு போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பரிமாற்றம் செய்தது முக்கியக் குற்றச்சாட்டாகும்.

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டில் அனில் அம்பானியின் பங்கை அவரின் செய்தித் தொடா்பாளா் மறுத்துள்ளார் 2007 முதல் 2022 வரை அந்நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளில் செயல்படும் அதிகாரம் இல்லாத இயக்குநா் என்ற நிலையில் அனில் அம்பானி பதவி வகித்ததாக அவா் விளக்கமளித்தார்.

 

ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் மூன்று மடங்காக உயர்வு!

புவனேஸ்வர், டிச.11 ஒடிசாவில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊழியத்தை 3 மடங்காக உயர்த்த சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

நாட்டிலேயே ஒடிசாவில்தான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் அதிகம். ஒடிசா மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்போதுள்ள ஊதியத்தை விட 3 மடங்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் ரூ.1.11 லட்சம் ஊதியம் பெறுகின்றனர். இது ரூ.3.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப் பேரவைத் தலைவர், சட்டப் பேரவை துணைத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியமும் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பதவியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் யாராவது உயிரிழந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.இதுகுறித்து அமைச்சர் முகேஷ் கூறும்போது, ‘‘ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய மாக ரூ.1.17 லட்சம் வழங்கப்படும். முதலமைச்சருக்கு மாதம் ரூ.3 லட்சத்து 74,000, சட்டப் பேரவைத் தலைவர், துணை தலைவருக்கு ரூ.3 லட்சத்து 68,000, அமைச்சர்கள் ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் ஊதியமாக பெறுவார்கள். கேபினட் அமைச்சர்கள் ரூ.3 லட்சத்து 62 ஆயிரம் பெறுவார்கள். அரசு தலைமை கொறடா, துணை கொறடா ஆகியோர் முறையே ரூ.3 லட்சத்து 62,000, ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஊதியம் பெறுவார்கள்.கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17-ஆவது சட்டப்பேரவை பொறுப்பேற்றது. அன்றைய தினம் முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வருவதாக அமைச்சர் முகேஷ் மகாலிங் அறிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *