2025ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த கூட்ட நெரிசல் நிகழ்வுகளும்- உயிரிழப்புகளும்..! ஒரு பார்வை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

2025-ஆம் ஆண்டு தொடங்கியது முதல் கூட்ட நெரிசலால் விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதனால், உயிர்ச் சேதங்களும் அதிகளவில் ஏற்பட்டன. இந்தியாவில் நடந்த துயரச் சம்பவங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்..

திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனம்

ஆந்திரப் பிரதேசம் திருப்பதியில் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி அன்று வைகுண்ட துவார தரிசனத்திற்கான  நுழைவுச் சீட்டுகள் வாங்குவதற்காக பக்தர்கள் முண்டியடித்தபோது பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரி ழந்தனர்.

மகா கும்பமேளா

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி, அதாவது மவுனி அமாவாசையன்று திரிவேணி சங்கமத்தில் ‘புனித’ நீராடுவதற்காகக் கூடியிருந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கினர்.

இந்த விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

டில்லி ரயில் நிலையம்

பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அன்று, டில்லி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளாவிற்குச் செல்ல ரயில் ஏறுவதற்காகக் காத்திருந்த பயணிகள் இடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

சிறீலைராய் தேவி கோயில் திருவிழா

கோவாவில் உள்ள ஷிர்காவ் கிராமத்தில் கடந்த மே 3ஆம் தேதி அன்று நடந்த ஆண்டு விழாவின்போது அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரு அய்பிஎல் வெற்றிக் கொண்டாட்டம்:

கருநாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூன் 4ஆம் தேதி அன்று நடந்த அய்பிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அய்பிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது மைதானத்தின் நுழை வாயிலில் ஏற்பட்ட நெரிசலால் இந்த துயரச் சம்பவம் நடந்தது.

கரூர் த.வெ.க. பரப்புரைக் கூட்டம்

தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் இந்த விபத்து ஏற்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஆந்திரா வெங்கடேஸ்வரா சுவாமி கோயில்
ஏகாதசி விழா

கடந்த நவம்பர் 1ம் தேதி அன்று ஆந்திரப் பிரதேசத்தின் சிறீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் ஏகாதசி விழாவின்போது ஏற்பட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *