ஹிந்து அமைப்பினரின் அடாவடித்தனம்! இஸ்லாமிய மாணவியின் ஹிஜாப் உடையைப் பறித்து, காவித் துண்டு அணிவித்தனர்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மங்களூரு, டிச.9 கருநாடகத்தில் ஹாவேரி மாவட்டம், அக்கியலூர் சி.ஜி.பெல்லாட் அரசு கல்லூரியில்  புதிதாகச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவர், தலையை மறைக்கும் ஹிஜாப் எனப்படும் ஆடையை அணிந்துவந்தார். அதைக்  கண்டித்து ஹிந்து அமைப்பினர்  அம்மாணவிக்கு காவித் துண்டு கொடுத்து வகுப்புகளுக்குச் செல்லுமாறு அடாவடி யில் இறங்கியுள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு முன்பு கருநாடக மங்களூரு அரசுக் கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி தலையை மறைக்கும் ஆடையை அணிவதை எதிர்த்து ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போதையை பாஜக அரசும் அதற்கு ஆதரவு அளித்தது. இதனாலேயே கருநாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பறிகொடுத்தது.

இந்த நிலையில் கருநாடகாவில் 2027 ஆம் ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு இப்போதே மதவாதப் பிளவு நடவடிக்கையில் இறங்கிவிட்டனர்.

கைப்பேசி தடைக்கு
எதிர்ப்பு!

காவித் துண்டு அணிந்துள்ள மாண வர்களின் ஒளிப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவி, கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கல்லூரியில் கைப்பேசி சோதனை நடத்தப்பட்டது இதற்கும் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் விரேஷ் கும்மூர் கூறுகையில், ‘‘ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் கல்லூரிச் சீருடையில்தான் உள்ளனர். இருப்பினும் ஹிந்து அமைப்பினர் காவித் துண்டுகளை அணியவைத்து போராட்டத்தில் ஈடுபடத் தூண்டுகின்றனர்.

அனைத்து ஆசிரியர்களுடனும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுடன் விவாதித்த பிறகு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

கல்வி வளாகத்தில், மாண வர்க ளிடையே பிளவையும், வெறுப்பையும் விதைக்கும் இது போன்ற நடவடிக்கைகளும், அர சியல் சார்ந்த தலையீடுகளும் மிகவும் கண்டிக்கத்தக்கவை. கல்வி என்பது அனைவருக்குமானது. இங்கு மத ரீதி யான பிரிவினைகளுக்கு இடமளிக்கக் கூடாது.

சகோதரத்துவத்தைக் குலைக்கும் இத்தகைய செயல்களுக்கு எதிராக மக்கள் அனைவரும் மொழி, மதம் கடந்து, ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும். நமது குழந்தைகளுக்கு நல்லிணக்கமான சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்  என்று கருநாடக கல்வி ஆர்வலர்கள் கவலையோடு கோரிக்கை விடுத்துள்ள னர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *