ஏற்கெனவே, இந்தியாவில் செய்யப்படும் முயற்சிதான். இருந் தாலும் ஜெர்மானியர்கள் தங்கள் முத்திரையை அதில் பதித்திருக் கின்றனர். ஒரு முறை பயன்படுத் தப்படும் கோப்பைகள் சுற்றுச் சூழலுக்கு கேடு.
எனவே, களிமண் கோப்பை களை குளிர் பானம், தேனீர் போன்றவற்றை அருந்த பயன் படுத்தலாம் என்கிறது ‘காயாஸ்டார்’ என்ற புத்திளம் நிறுவனம்.
அவர்கள் உருவாக்கியுள்ள முப்பரிமாண அச்சியந்திரம், 30 நொடிக்குள் ஒரு களிமண் கோப்பையை அச்சிட்டுத் தருகிறது.
இது போன்ற முப்பரிமாண அச்சியந்திரத்தை பெரிய அளவில் செய்து, பெருநகரங்களின் எல்லை யில் நிறுவி, அங்கு கிடைக்கும் களிமண்ணைக் கொண்டே கோப்பைகளை அச்சிட்டுத் தரலாம் என்கிறது காயாஸ்டார்.
அதேபோல,பெரிய உணவகங்கள், சிறிய முப்பரிமாண அச்சியந்திரத்தை வாங்கி, தங் களுக்குத் தேவையான களிமண் கோப்பையை அச்சிட்டுக் கொள்ளலாம்.
இது சுடாத களிமண்ணால் ஆன கோப்பை என்பதால், காலா வதியானாலும் சீக்கிரமே சிதைந்து மண்ணாவதோடு சூழலுக்கும் கேடு தராது.