வருகிற ஜனவரி 2 ஆம் தேதி சமத்துவ நடைப்பயணத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தகவல்

சென்னை, டிச. 6– வரும் ஜனவரி 2 ஆம் தேதி மேற்கொள்ள இருக்கும் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சமத்துவ நடைபயணம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று (5.12.2025) மாலை சந்தித்து பேசினார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், ”பள்ளி, கல்லூரி மாணவர்களை சீர்கெடுக்கும் மது மற்றும் போதை பொருட்களில் இருந்து தடுப்பதற்கான சமத்துவ நடைபயணம் வரும் ஜனவரி 2 ஆம் தேதி திருச்சி மாநகரில் தொடங்க உள்ளேன். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறவும் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.

மேலும், திருச்சியில் தொடங்கும் சமத்துவ நடை பயணத்தின் போது, ஜனவரி 12ஆம் தேதி வரை ஒவ்வொரு கிராமமாக சென்று மக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்திக்க உள்ளேன்.

திருச்சியில் தொடங்கப்படும் சமத்துவ நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். மதுரையில் முடியும் இந்த நடைபயண நிறைவு நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வபெருந்தகை, சிபிஅய், சிபிஎம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இது என்னுடைய 9ஆவது நடைபயணம்” என்று வைகோ கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *