புதுடில்லி, டிச.6 இந்தியா வந்துள்ள அதிபர் புதினுக்கு, ‘பகவத் கீதை’யின் ரஷ்ய பதிப்பை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியாவிற்கு வந்தார். டில்லி, பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புதினுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்று, தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் புதின் பங்கேற்றார். அதன்பின், சிறிது நேரம் இரு நாட்டு தலைவர்களும் உரையாடி, தங்குவ தற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்கு இரவு 8.30 மணிக்குப் புதின் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுக்கு ‘பகவத் கீதை’யின் ரஷ்ய பதிப்பை பரிசாக வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக ஒளிப்படத்தை சமூக வலை தளத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ரஷ்ய மொழியில் ‘பகவத் கீதை’யின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன். ‘கீதையின் போத னைகள்’ உலகம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
