மூன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி,நவ.8 டில்லி, ராஜஸ்தான், குவாஹாட்டி ஆகிய 3 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் 6.11.2023 அன்று பரிந்துரைத்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட் டது. இது தொடர்பாக கொலீஜியம் வெளியிட்ட அறிக்கையில், ‘உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் இருப்பதால், நீதிபதிகளின் பணிச்சுமை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் முழு பலத்தை உறுதி செய்வது அவசியமாகும். தற்போது உள்ள 3 காலியிடங்களையும் நிரப்ப கொலீஜியம் முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய தகுதி வாய்ந்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகள் ஆகியோரின் பெயர்களை கொலீஜியம் பரிசீலித்தது. அதன்படி, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசீ, குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைக்கிறது. இந்தப் பரிந் துரைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தால், உச்சநீதி மன்றத்தின் 31 நீதிபதிகளின் எண்ணிக்கை 34 -ஆக (முழு எண்ணிக்கை) அதிகரிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *