சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியா தாய்லாந்தில் 557 பேர் உயிரிழப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜகார்த்தா, நவ. 30– சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியாவில் 294 பேரும், தாய்லாந்தில் 263 பேரும் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளிலும் இதுவரை 557 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்யார் புயலாக வலுப்பெற்று கடந்த 26ஆம் தேதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் கரையைக் கடந்தது. இதன்காரணமாக அங்கு கனமழை பெய்து, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

குறிப்பாக வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சே மாகாணங்களில் இதுவரை 294 பேர் உயிரிழந்து உள்ளனர். 620 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 290 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 29,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 3.11 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டிருக்கிறது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப பல வாரங்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல் காரணமாக தாய்லாந்து நாட்டின் 14 மாகாணங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அந்த நாட்டில் இதுவரை 263 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவின் 10 மாகாணங்களில் சென்யார் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அந்த நாட்டில் 21,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்து உள்ளனர். சென்யார் புயலால் இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளில் மட்டும் 557 பேர் உயிரிழந்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *