மாதவரம் – தரமணி தடத்தில் சுரங்க நிலையங்கள் மூன்று ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு

1 Min Read

அரசியல்

சென்னை, மே 6- மாதவரம் – தரமணி வழித்தடத்தில் சுரங்க ரயில் நிலை யங்களை அமைக்க 3 ஒப்பந்த நிறு வனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், 118.9கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் திட் டப்பணிகள் நடைபெற்று வரு கின்றன. இவற்றில் மாதவரம்–சிறுசேரி சிப்காட்வரையிலான 3ஆ-வது வழித்தடத்தில், மாதவரம்–தரமணி வரை பாதையில் சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியில் கடந்த ஓராண்டாக தொய்வு ஏற்பட்டுள்ளது.

இப்பணிகளை மேற்கொள்வ தற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப் பட்டிருந்தது. ஆனால், நிர்ணயிக் கப்பட்டதை காட்டிலும் அதிக விலை குறிப்பிடப்பட்டதால், கடந்த 2021ஆ-ம் ஆண்டில் போடப்பட்ட6 ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப் பட்டன. தொடர்ந்து, புதிய ஒப்பந் தம் கோர முயற்சி எடுக்கப்பட்டது.

மேலும், ஒப்பந்தப்புள்ளி விவ காரத்தில் சில மாற்றங்கள் செய்ய வும் முடிவு செய்யப்பட்டது. 

மேலும், மாதவரம்-பெரம்பூர், அயனாவரம்–கெல்லீஸ், கீழ்ப்பாக் கம்-மருத்துவக் கல்லூரி – ராயப் பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை – அடையாறு,அடையாறு-தரமணி, கொளத்தூர் — நாதமுனி என 6 தொகுப்புகளை பிரித்து ஒப்பந்தம் வழங்க முடிவு எடுக்கப் பட்டது.

இந்நிலையில், மாதவரம்- – தரமணி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணி களை மேற்கொள்வதற்காக, 3 நிறு வனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கள் கூறி யதாவது: 

மாதவரம்–பெரம்பூர் பாதையில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானத்துக்காக, தினேஷ் சந்திரா அகர்வால் இன்ப்ராகான் பிரைவேட்நிறுவனம் மற்றும் சேமா எண்டர்பிரைசஸ் நிறுவன மும், அயனாவரம்-கெல்லீஸ் பாதை யில் கட்டுமானப் பணிக்காக டாடா புராஜக்ட்ஸ் நிறுவனமும் குறைந்த ஏலத்தொகையை கோடிட்டு காட்டி உள்ளன என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *