சென்னை, மே 6- மாதவரம் – தரமணி வழித்தடத்தில் சுரங்க ரயில் நிலை யங்களை அமைக்க 3 ஒப்பந்த நிறு வனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், 118.9கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் திட் டப்பணிகள் நடைபெற்று வரு கின்றன. இவற்றில் மாதவரம்–சிறுசேரி சிப்காட்வரையிலான 3ஆ-வது வழித்தடத்தில், மாதவரம்–தரமணி வரை பாதையில் சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியில் கடந்த ஓராண்டாக தொய்வு ஏற்பட்டுள்ளது.
இப்பணிகளை மேற்கொள்வ தற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப் பட்டிருந்தது. ஆனால், நிர்ணயிக் கப்பட்டதை காட்டிலும் அதிக விலை குறிப்பிடப்பட்டதால், கடந்த 2021ஆ-ம் ஆண்டில் போடப்பட்ட6 ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப் பட்டன. தொடர்ந்து, புதிய ஒப்பந் தம் கோர முயற்சி எடுக்கப்பட்டது.
மேலும், ஒப்பந்தப்புள்ளி விவ காரத்தில் சில மாற்றங்கள் செய்ய வும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், மாதவரம்-பெரம்பூர், அயனாவரம்–கெல்லீஸ், கீழ்ப்பாக் கம்-மருத்துவக் கல்லூரி – ராயப் பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை – அடையாறு,அடையாறு-தரமணி, கொளத்தூர் — நாதமுனி என 6 தொகுப்புகளை பிரித்து ஒப்பந்தம் வழங்க முடிவு எடுக்கப் பட்டது.
இந்நிலையில், மாதவரம்- – தரமணி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணி களை மேற்கொள்வதற்காக, 3 நிறு வனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கள் கூறி யதாவது:
மாதவரம்–பெரம்பூர் பாதையில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானத்துக்காக, தினேஷ் சந்திரா அகர்வால் இன்ப்ராகான் பிரைவேட்நிறுவனம் மற்றும் சேமா எண்டர்பிரைசஸ் நிறுவன மும், அயனாவரம்-கெல்லீஸ் பாதை யில் கட்டுமானப் பணிக்காக டாடா புராஜக்ட்ஸ் நிறுவனமும் குறைந்த ஏலத்தொகையை கோடிட்டு காட்டி உள்ளன என்று கூறினார்.