திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் ‘மோசடி மேலாளர்’ கைது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பதி, நவ.28  திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு மே மாதம் வரை ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்த நெய் ஒப்பந்ததாரர்கள், 40-சதவீதம் வரை கலப்பட நெய்யை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கி உள்ளது உச்ச நீதிமன்றத்தால் சிபிஅய் தலைமையில் அமைக்கப் பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை மூலம் தெரியவந்தது.

இதுவரை இவ்வழக்கில் ஒப்பந்ததாரர்கள், அவர்களுக்கு உதவிய மற்ற பால் நிறுவன அதிகாரிகள் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு உடந்தையாக இருந்த தாக திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்முதல் பிரிவின் பொது மேலாளர் சுப்பிரமணியம் நேற்று (27.11.2025) கைது செய்யப்பட்டார். இதனால் இவ்வழக்கில் கைதானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட சுப்பிரமணியத்தை நேற்று திருப்பதியில் இருந்து அதிகாரிகள் நெல்லூர் அழைத்து சென்று, அங்குள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *